search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிகரெட் புகைத்தபடி தேசிய கீதம் பாடிய 2 மாணவிகள்- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    X

    சிகரெட் புகைத்தபடி தேசிய கீதம் பாடிய 2 மாணவிகள்- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    • கொல்கத்தா ஐகோர்ட்டு வக்கீல் உள்பட பலரும் பாரக்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
    • தகவல் வெளியானதும் மாணவிகள் இருவரும் தாங்கள் பதிவிட்ட வீடியோவை நீக்கி விட்டனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாணவிகள் 2 பேர் சிகரெட் புகைத்தபடி தேசிய கீதம் பாடிய வீடியோ வெளியானது.

    அந்த வீடியோவில் மாணவிகள் 2 பேரும் அருவருக்கத்தக்க அங்க அசைவுகளுடன் கைகளில் சிகரெட் வைத்தப்படி தேசிய கீதம் பாடுகிறார்கள். மாணவிகள் பாடும் விதம் தேசிய கீதத்தை அவமரி யாதை செய்வதாக இருந்தது.

    இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக அந்த மாணவிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டு வக்கீல் உள்பட பலரும் பாரக்பூர் போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மாணவிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

    இதுபற்றிய தகவல் வெளியானதும் அந்த மாணவிகள் இருவரும் தாங்கள் பதிவிட்ட வீடியோவை நீக்கி விட்டனர். மேலும் இன்னொரு சமூக வலைதளத்தில் நேரலையாக தோன்றி விளக்கமும் அளித்தனர். அதில் விளையாட்டு தனமாக இப்படி செய்து விட்டதாகவும், இதற்காக வருந்துவதாகவும் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே பாரக்பூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் மாணவிகள் பற்றிய விபரங்கள் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவர் மீதும் தேசிய சின்னங்களை அவமதிப்பது தொடர்பான சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×