search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் சட்டசபை தேர்தல்- வேட்புமனு தாக்கல் தொடங்கியது
    X

    குஜராத் சட்டசபை தேர்தல்- வேட்புமனு தாக்கல் தொடங்கியது

    • 2-வது கட்டமாக 93 தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது.
    • தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும் என்ற நிலையில் ஆம் ஆத்மி 3-வதாக களத்தில் குதித்துள்ளது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வியை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    முதல் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. வருகிற 14ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களின் பரிசீலனை 15ம் தேதி நடக்கிறது. 17ம் தேதி மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

    2-வது கட்டமாக 93 தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது. 17ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பரிசீலனை 18ம் தேதி நடக்கிறது. மனுவை வாபஸ் பெற நவம்பர் 21ம் தேதி கடைசி தினமாகும்.

    குஜராத் சட்டசபை தேர்தலில் 4.9 கோடி வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

    குஜராத் சட்டசபை தேர்தலை நடத்த ரூ.450 கோடி செலவாகும் என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது. 2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலை நடத்த ரூ.250 கோடி செலவழிக்கப்பட்டு இருந்தது.

    Next Story
    ×