search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவிலில் 5 மணி நேரத்தில் தரிசனம்: பக்தர்கள் மகிழ்ச்சி
    X

    திருப்பதி கோவிலில் 5 மணி நேரத்தில் தரிசனம்: பக்தர்கள் மகிழ்ச்சி

    • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூகாம்ப்ளக்ஸில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூகாம்ப்ளக்ஸில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பதி:

    புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை முன்னிட்டு நேற்று முன்தினம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சனிக்கிழமை காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலை 5 மணிக்கு பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்து காணப்பட்டது.

    இதனால் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு முறையில் இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 2 மணி நேரத்திலும் சாமி தரிசனம் செய்தனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூகாம்ப்ளக்ஸில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதனால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்வதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதியில் நேற்று 72,3 09 பேர் தரிசனம் செய்தனர். 26,296 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×