search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிகிச்சை பெறுவோர் குறித்த விவரம் இணையத்தில் அறியலாம்
    X

    சிகிச்சை பெறுவோர் குறித்த விவரம் இணையத்தில் அறியலாம்

    • சிகிச்சையிலிருந்த 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 382 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • ரெயில் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது.

    நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையிலிருந்த 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 382 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ரெயில் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    srcodisha.nic.in, bmc.govt.in, osdma.org ஆகிய இணையதளங்களில் சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    Next Story
    ×