கணவர் பிணத்தை வீட்டில் வைத்து விட்டு ஓட்டு போட்ட மூதாட்டி

கணவர் இறந்தாலும் கர்னெபுடி சித்தேம்மா தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்தார். கணவர் இறந்த வேதனையை நெஞ்சில் சுமந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
கணவர் பிணத்தை வீட்டில் வைத்து விட்டு ஓட்டு போட்ட மூதாட்டி
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் நேற்று சட்டப்பேரவை, பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

பாபட்லா மாவட்டம், கரம் சேடுவில் உள்ள அம்பேத் நகரை சேர்ந்தவர் கர்னெபுடி சிங்கையா. இவரது மனைவி கர்னெபுடி சித்தேம்மா (வயது 60). கர்னெபுடி சிங்கையா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை திடீரென கர்னெபுடி சிங்கையா உடல் நலக்குறைவால் பரிதாபமாக இறந்தார். தனது கணவர் இறந்து விட்டதால் கர்னெபுடி சித்தேம்மா துக்கத்தில் இருந்தார்.

கணவர் இறந்தாலும் கர்னெபுடி சித்தேம்மா தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்தார். கணவர் பிணத்தை வீட்டில் வைத்துவிட்டு கர்னெபுடி சித்தேம்மா வாக்கு சாவடிக்கு சென்றார். கணவர் இறந்த வேதனையை நெஞ்சில் சுமந்து கொண்டு வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com