search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற போலீஸ்காரர்
    X

    கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற போலீஸ்காரர்

    • கடந்த 3 நாட்களாக கணவன்- மனைவி இடையே மீண்டும் சண்டை நடந்து வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஷோபா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சூர்யா பேட்டை மாவட்டம் முனகலுவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 41). இவர் வனஸ்தலிபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஷோபா (38). இவர்களுக்கு சாத்விக் (14), நித்தின் (9) என 2 மகன்கள் உள்ளனர். ஷோபா வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார்.

    ராஜ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புவனகிரி போலீஸ் நிலையத்தில் வேலை செய்த போது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஷோபா தனது பெற்றோருக்கு தெரிவித்தார் அவரது பெற்றோர் ராஜ்குமார் குறித்து போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் செய்தனர். அவர் ராஜ்குமாரை அழைத்து அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தார். இருப்பினும் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை.

    கடந்த 3 நாட்களாக கணவன்- மனைவி இடையே மீண்டும் சண்டை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு ராஜ்குமார் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது ஷோபா முதல் மாடியில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்கி வந்தார். இதனை கண்ட ராஜ்குமார் ஆத்திரத்தில் மனைவியை பிடித்து கீழே தள்ளினார். கத்தியை எடுத்து ஷோபாவின் கழுத்தை அறுத்தார்.

    இதனைக் கண்ட அவர்களது மூத்த மகன் சாத்வித் தந்தையை தடுத்து நிறுத்தினான். ராஜ்குமார் மகனையும் கத்தியால் வெட்டினார்.

    இதில் காயம் அடைந்த சாத்விக் ரத்த காயங்களுடன் வனஸ்தலிபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஷோபா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். போலீஸ்காரர் ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    போலீசார் ஷோபாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷோபா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×