இடுக்கியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி பலி

மாணவர்கள் இறந்த பகுதியில் கடந்த மாதம்தான் உள்ளூரை சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். குட்டி யானை ஒன்றும் தண்ணீரில் மூழ்கி இறந்தது.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து மூணாறு செல்லும் வழியில் வலியபாறக்குட்டி ஆறு உள்ளது.

இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் சுற்றுலா வருவது வழக்கம். இதுபோல மாங்குளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 30 பேர் சுற்றுலா சென்றனர்.

அவர்களில் சிலர் வலியகுட்டி ஆற்றில் குளித்தனர். அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திடீரென ஆற்றில் மூழ்கி அலறினர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

என்றாலும் 3 மாணவர்களும் நீரில் மூழ்கி மயங்கினர். அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 3 மாணவர்களும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாணவர்கள் இறந்த பகுதியில் கடந்த மாதம்தான் உள்ளூரை சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். இதுபோல குட்டி யானை ஒன்றும் இதே பகுதியில் தண்ணீரில் மூழ்கி இறந்தது.

இந்த பகுதியில் ஆற்றுக்குள் ஆழமான குழிகள் இருப்பதாகவும், இதில் தெரியாமல் இறங்கி விடுவோர் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் நடப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

இங்கு சுற்றுலா வருவோர் இந்த குழிகள் பற்றி தெரியாமல் அதில் இறங்கி உயிரை இழப்பதாகவும், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com