search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் வந்தே பாரத் உள்ளிட்ட ரெயில்கள் மீது கற்கள் வீசிய 3 பேர் கைது
    X

    கேரளாவில் வந்தே பாரத் உள்ளிட்ட ரெயில்கள் மீது கற்கள் வீசிய 3 பேர் கைது

    • ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடந்தது.
    • ரெயில்கள் மீது கல் வீசிய 3 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடந்தது. இந்த மாதத்தில் வந்தே பாரத், ஏர்நாடு எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ், நேத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவங்கள் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிந்து கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்தனர்.

    வந்தே பாரத் ரெயில் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவத்தில் அந்த ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் மாஹே ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரெயில்கள் மீது கல்வீசிய சைதீஸ், சாதிக் அலி(30), மொய்து(53) ஆகிய 3 பேரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×