அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமல்ல: சுப்ரீம் கோர்ட்

வந்தே மாதரம் பாடலை 1875-ம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதினார்.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிமுறைகளில், அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும், அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. வந்தே மாதரம் பாடலை 1875-ம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதினார்.

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமல்ல, அது ஒரு நெறிமுறை அல்லது அறிவுறுத்தல் மட்டுமே என சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றம் இந்த சுற்றறிக்கை ஒரு அறிவுறுத்தல் மட்டுமே என்றும், அதில் பாடலை கட்டாயமாக்கவில்லை என்றும் தெரிவித்தது. அதை பின்பற்றாதவர்களுக்கு எந்தவித தண்டனையும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com