search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வந்தேபாரத் ரெயில் மீது கல்வீச்சு
    X

    வந்தேபாரத் ரெயில் மீது கல்வீச்சு

    • தாக்குதலில் ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த கண்ணாடி ஜன்னலில் விரசல் ஏற்பட்டது.
    • கடந்த வாரமும் வந்தே பாரத் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை கடந்தசில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மலப்புரம் மாவட்டம் தனூர் மற்றும் பரப்பனங்காடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

    இந்த தாக்குதலில் ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த கண்ணாடி ஜன்னலில் விரசல் ஏற்பட்டது. அதிரஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் கடந்த வாரம் தலச்சேரி-மாஹே ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது வந்தே பாரத் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×