சுட்டெரிக்கும் வெயில்: வட மாநிலங்களில் பள்ளி நேரங்கள் மாற்றம்!

வெயிலின் தாக்கத்தை கருத்தில்கொண்டு வட மாநிலங்கள் பள்ளி நேரங்களை மாற்றியுள்ளன.
சுட்டெரிக்கும் வெயில்: வட மாநிலங்களில் பள்ளி நேரங்கள் மாற்றம்!
Published on

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், நாளுக்கு நாள் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோடையால் வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் பள்ளிகளுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

கடும் பகல் நேர வெப்பத்திலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், பள்ளிகளை வழக்கத்தை விட சீக்கிரமாக (காலை 7:00 அல்லது 7:30 மணிக்கு) தொடங்கி, நண்பகல் 12:00 அல்லது 12:30 மணிக்கெல்லாம் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பல மாநிலங்கள் முன்கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்துள்ளன. சத்தீஸ்கர் மாநிலம் 2 வாரங்களுக்கு முன்னதாகவே தனது கோடை விடுமுறையை தொடங்கி ஏப்ரல் 20 முதல் ஜூன் 15 வரை விடுமுறை அறிவித்துள்ளது. ஒடிசாவில் நாளைமுதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com