

தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆணையத்தின் சல்யூட் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,"சுதந்திரத்துக்கு முன் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம், மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆணையத்தின் சல்யூட்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4 திங்களன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.