அவரவர் வரம்புக்குள் இருந்தால் தான் மரியாதை.. மீண்டும் உச்சநீதிமன்றத்தை விமர்சித்த ஜகதீப் தன்கர்

அந்தந்த நிறுவனங்கள் அந்தந்த களங்களுக்குள் செயல்படும்போது மட்டுமே மரியாதையாக இருக்கும்.பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அவசரநிலையை நாம் மறந்துவிட்டோமா?
அவரவர் வரம்புக்குள் இருந்தால் தான் மரியாதை.. மீண்டும் உச்சநீதிமன்றத்தை விமர்சித்த  ஜகதீப் தன்கர்
Published on

உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலின் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் நேற்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், முதலில் தேசம் எப்போதும் நமது வழிகாட்டும் சித்தாந்தமாக இருக்க வேண்டும். ஆனால் மிகப்பெரிய சவால்கள் உள்ளிருந்து எழுகின்றன என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கட்டுப்பாடு விதித்ததை பற்றி பேசிய அவர், "மிகவும் ஆபத்தான சவால்கள் உள்ளிருந்து வரும். அவற்றை நாம் வெளிப்படையாக விவாதிக்க முடியாது.

இவற்றுக்கு எந்த தர்க்கரீதியான அடிப்படையும் இல்லை, தேசிய வளர்ச்சியுடன் எந்த தொடர்பும் இல்லை. மேலும் அவை நிர்வாகத்தில் வேரூன்றியுள்ளன.

நான் தனிப்பட்ட முறையில் இதுபோன்ற சவால்களைத் தாங்கிக் கொண்டேன். அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களும் ஒன்றையொன்று மதிக்க வேண்டியது நமது கடமையாகும். மேலும் அந்தந்த நிறுவனங்கள் அந்தந்த களங்களுக்குள் செயல்படும்போது மட்டுமே மரியாதையாக இருக்கும். மோதல் இருக்கும்போது, ஜனநாயகம் செழிக்காது.

ஜனாதிபதி பதவியைப் போன்ற கண்ணியமான ஒரு பதவியைப் பற்றி கருத்து தெரிவிப்பது, என் கருத்துப்படி, பிரச்சனைக்குரிய விஷயம்.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் சொந்த வரையறுக்கப்பட்ட பங்கு உள்ளது. மேலும் எந்த நிறுவனமும் மற்றொருவரின் பொறுப்பை ஆக்கிரமிக்கக்கூடாது.

அரசியலமைப்பை அதன் உண்மையான உணர்வில் நாம் மதிக்க வேண்டும். சட்டமன்றத்தால் சட்ட தீர்ப்புகளை வழங்க முடியாது. அதேபோலத்தான் நீதித்துறையும் அதன் எல்லைக்குள் இருக்க வேண்டும்.

விவாதம் மற்றும் உரையாடல் இல்லாமல், நமது வேதங்களின் தத்துவ சாராம்சம் மறைந்துவிடும். அது ஈகோ மற்றும் ஆணவத்திற்கு வழிவகுக்கிறது. இரண்டும் சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.

இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடு. பரந்த கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் அதை யாராவது சவால் செய்ய முயன்றால், நாம் அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். அவசரநிலையை நாம் மறந்துவிட்டோமா? பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அதன் இருண்ட நிழல்கள் இன்னும் இருக்கின்றன. அது இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயம் என்று தெரிவித்தார்.

சட்டமன்றங்கள் நிறைவேற்றிய மசோதாவை பரிசீலிக்க ஆளுநருக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம், ஜனாதிபதியும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க 3 மாதம் கெடு விதித்தது. இதை எதிர்த்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com