search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
    X

    திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    • நீண்ட விவாதத்திற்கு பின் திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறியது.
    • ஏற்கனவே மக்களவையிலும் திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேறியது.

    புதுடெல்லி:

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் பாராளுமன்ற நிலைக்குழு (உள்துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது.

    இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த 3 மசோதாக்களும் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெருமளவிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் அதிக அளவில் இருந்தனர். இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

    திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் இருந்த நிலையில் இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று 3 திருத்தப்பட்ட சட்டங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நீண்ட நேரம் விவாதம் நடத்தினார். இதன் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில் 3 மசோதாக்களும் நிறைவேறின. இதையடுத்து, தேதி குறிப்பிடப்படாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

    Next Story
    ×