search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேகமும் ஒழுகுது.. மேகத்தில் போகும் விமானமும் ஒழுகுது.. வைரலாகும் வீடியோ
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மேகமும் ஒழுகுது.. மேகத்தில் போகும் விமானமும் ஒழுகுது.. வைரலாகும் வீடியோ

    • விமான இருக்கைகளுக்கு நடுவே மழைநீர் கொட்டியது போன்ற வீடியோ வெளியானது.
    • அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பொதுவாக மழைக்காலத்தில் மக்கள் குடை இல்லாமல் வெளியில் செல்வது கிடையாது. ஒருவேளை அரசு பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் குடைகளை பிடித்தவாறு பயணம் செய்த பல்வேறு சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.

    இதேபோன்று ஒரு சம்பவம் விமானத்தில் ஏற்பட்டது என்றால் நம்புவீர்களா?. நம்பித்தான் ஆக வேண்டும். ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இருக்கைகைளுக்கு நடுவே மழைநீர் கொட்டுவதுபோல் நீர் கொட்டியது.

    மழைநீர் கொட்டுவதை அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவுடன் "ஏர் இந்தியா.. எங்களுடன் பறந்து செல்லுங்கள்- இது ஒரு பயணமாக மட்டும் இருக்காது, ஒரு மிகச் சிறந்த அற்புதமான அனுபவமாகவும் இருக்கும்" என்று அதன் விளம்பரத்தை கேலி செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார்.

    ஆனால், இந்த விமானம் எங்கிருந்து எங்கே சென்றது என்பதை அவர் குறிப்பிடவில்லை. பொதுவாக விமானத்தில் காற்று கூட புகாதவாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி இருக்கும் நிலையில் மழை நீர் எவ்வாறு? என கேள்வியும் எழும்பத்தான் செய்கிறது. தொழில் நுட்பகோளாறாகக் கூட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், விமான நிறுவனம் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

    தண்ணீர் விழுந்து கொண்டிருந்தபோதிலும், ஒன்றுமே நடக்காதது போல் பயணிகள் பயணித்தனர். இதுகுறித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×