மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்தார்

நாடு அனைவருக்கும் சொந்தமானது என்பதே சத்ரபதி சிவாஜி உலகிற்கு கூறிய செய்தி. சத்ரபதி சிவாஜி மகராஜ், ஷாஹு மகராஜ் போன்றவர்கள் இல்லை என்றால், அரசியலமைப்புச் சட்டமும் இருந்திருக்காது.
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்தார்
Published on

கோலாப்பூர்:

பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இன்று மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைத்தார்.

இந்த விழாவுக்கு முன்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

மக்களைப் பயமுறுத்தி, அரசியலமைப்பையும், நாட்டில் உள்ள அமைப்புகளையும் அழித்த பிறகு சத்ரபதி சிவாஜி முன் தலைகுனிந்து வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று பா.ஜனதாவை விமர்சனம் செய்தார். மேலும் அவர் கூறும்போது, நாடு அனைவருக்கும் சொந்தமானது என்பதே சத்ரபதி சிவாஜி உலகிற்கு கூறிய செய்தி. சத்ரபதி சிவாஜி மகராஜ், ஷாஹு மகராஜ் போன்றவர்கள் இல்லை என்றால், அரசியலமைப்புச் சட்டமும் இருந்திருக்காது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com