மிலாது நபி வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் மிலாது நபி என கொண்டாடப்படுகிறது. மிலாது நபியை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மிலாது நபி வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
Published on

புதுடெல்லி:

மிலாது நபியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ஜனாதிபதி முர்மு கூறியதாவது:

மிலாது நபி என்று கொண்டாடப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வலுப்படுத்த நபிகள் நாயகம் நமக்கு உணர்த்தியுள்ளார். சமூகத்தில் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மற்றவர்களிடம் இரக்கம் காட்டவும், மனித குலத்திற்கு சேவை செய்யவும் அவர் மக்களை ஊக்குவித்தார்.

புனித குர்ஆனின் புனிதமான போதனைகளை உள்வாங்கி, அமைதியான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com