உயிரிழந்த கணவரின் படுக்கை ரத்தத்தை துடைக்க 'கட்டாயப்படுத்தப்பட்ட' கர்ப்பிணி மனைவி - வீடியோ

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராஜ் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு ஷோ - காஸ் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உயிரிழந்த கணவரின் படுக்கை ரத்தத்தை துடைக்க 'கட்டாயப்படுத்தப்பட்ட' கர்ப்பிணி மனைவி - வீடியோ
Published on

மத்தியபிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் தரம் சிங் மராவி என்பவரின் குடும்பத்தினருக்கும் இன்னொரு தரப்பினருக்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக அக்டோபர் 31 அன்று 25 பேர் கொண்ட மர்ம நபர்கள் தரம் சிங் மராவி (65) மற்றும் அவரது 2 மகன்களையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தரம் சிங்கும் அவரது மகன் ரகுராஜும் (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவராஜ் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், 5 மாத கர்ப்பிணியான சிவராஜின் மனைவி, மருத்துவமனை படுக்கையில் உயிரிழந்த சிவராஜின் ரத்த கறையை துடைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து மருத்துவமனைக்கு ஷோ - காஸ் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேசிய மருத்துவர் சந்திரசேகர், "ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் ரோஷனி இரத்தத்தில் நனைந்த துணிகளை சேகரித்தார் எனவும் படுக்கையை சுத்தம் செய்யும்படி நாங்கள் அவரிடம் அறிவுறுத்தவில்லை என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com