அரசியல் இரக்கமற்றது... முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக நேர்மையாகவும், தொழில்முறை அணுகுமுறையுடனும் செயல்பட்டது - நாரா லோகேஷ்

முதலீட்டாளர்கள் எவரும் அரசிடம் இருந்து பணம் கேட்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி நான் கேள்விப்பட்டதே இல்லை.
அரசியல் இரக்கமற்றது... முதலீடுகளை ஈர்ப்பதில் திமுக நேர்மையாகவும், தொழில்முறை அணுகுமுறையுடனும் செயல்பட்டது - நாரா லோகேஷ்
Published on

ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ், தமிழ்நாட்டின் முந்தைய திமுக அரசின் முதலீட்டு ஈர்ப்பு நடைமுறைகள் மிகவும் நேர்மையாகவும், தொழில்முறை அணுகுமுறையுடனும் இருந்ததாகப் பாராட்டியுள்ளார்.

தனியார் ஊடக நிகழ்வில் பேசிய அவர், அரசியல் களம் இரக்கமற்றதாக இருந்தாலும், தகுதியான விஷயங்களைப் பாராட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டு இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அப்போது பேசிய அவர்,

“அரசியல் என்பது இரக்கமற்றது. முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் ஆந்திரா கடுமையாகப் போட்டியிட்டது. சில திட்டங்களை ஆந்திரா வென்றது, சிலவற்றை இழந்தது. ஆனால், திமுக அரசு தங்களிடம் லஞ்சம் கேட்டதாக எந்தவொரு முதலீட்டாளரும் புகார் கூறவில்லை.

கொடுக்க வேண்டிய கிரெடிட்டை கொடுத்தே ஆக வேண்டும்: திமுக அரசு முதலீட்டு செயல்முறையை மிகவும் சுத்தமாகவும், தொழில்முறையாகவும் அணுகியது. அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.” என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தற்போதைய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, முந்தைய திமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான முக்கிய முதலீட்டுத் திட்டங்கள் ஆந்திரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களுக்குப் பறிபோனதாகக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவர் இந்தக் கருத்தை பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com