search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடல் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்ட போலீஸ்காரர்கள்
    X

    கடல் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்ட போலீஸ்காரர்கள்.

    கடல் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்ட போலீஸ்காரர்கள்

    • ஷிவானி கடற்கரையில் கடல் அலைகளில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • ஷிவானி வந்தனம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஷிவானி (வயது25). பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வந்த இவர், தனது நண்பர்கள் சிலருடன் கேரள மாநிலத்துக்கு சுற்றுலா வந்தார்.

    பல்வேறு இடங்களை சுற்றுப்பார்த்த அவர்கள், ஆலப்புழா மாவட்டம் மாராரி கடற்கரைக்கு நேற்று சென்றனர். ஷிவானி உள்ளிட்டவர்கள் கடற்கரையில் கடல் அலைகளில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலை ஷிவானியை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

    இதனை அவருடன் வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் பயத்தில் காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர். அப்போது அந்த வழியாக அர்த்துங்கல் போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் சைரஸ் மற்றும் ஜெரோம் வந்தனர்.

    அவர்கள் கடலுக்குள் 20 மீட்டர் தொலைவில் ஷிவானி தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு கடலுக்குள் நீந்திச்சென்று ஷிவானியை மீட்டு கரைக்கு இழுத்து வந்தனர். அப்போது அவர் சுய நினைவின்றி இருந்தார்.

    இதனால் அங்கிருந்தவர்கள் என்ன செய்வதென்று தவித்தபடி இருந்தனர். அப்போது அங்கு மற்றொரு போலீஸ்காரரான விபின் விஜய் வந்தார். அவர், சுயநினைவின்றி கிடந்த ஷிவானிக்கு சுவாசம் அல்லது இயதத்துடிப்பு நின்றுவிட்டால் செய்யப்படும் அவசர கால உயிர்காக்கும் செயல்முறையான சி.பி.ஆர். சிகிச்சையளித்தார்.

    இதையடுத்து அவர் சுய நினைவுக்கு வந்தார். பின்பு போலீசார் மூவரும் அவரை கைத்தாங்கலாக நடத்திச்சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஷிவானி வந்தனம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்ணை, விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய போலீஸ்காரர்களை போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். போலீஸ்காரர்கள் சரியான நேரத்தில் செய்த செயலே அந்த இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றியது என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் தெரிவித்தார்.

    Next Story
    ×