என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சாவர்க்கர் பிறந்தநாள்: பிரதமர் மோடி, சபாநாயகர், மத்திய மந்திரிகள் மரியாதை செலுத்தினர்
- சாவர்க்கருக்கு மரியாதை செலுத்தியபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
- இந்தியர்களின் இதயங்களில் தேசபக்தியின் சுடரை ஏற்றிவைத்தார் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
சாவர்க்கரின் பிறந்தநாள இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய பாராளுமன்றத்தில் உள்ள சாவர்க்கரின் திருவுருவப் படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சாவர்க்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
சாவர்க்கருக்கு மரியாதை செலுத்தியபின், உள்துறை மந்திரி அமித் ஷா டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், சாவர்க்கர் தன் எண்ணங்களால் எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் தேசபக்தியின் சுடரை ஏற்றிவைத்தார், என குறிப்பிட்டுள்ளார். வீர் சாவர்க்கரின் தேசபக்தி, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை போற்றத்தக்கது என்றும், எப்போதும் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சாவர்க்கர் மகாராஷ்டிராவில் 1883இல் மே 28ம் தேதி பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்ட இவர், இந்துத்துவா கொள்கை கொண்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளால் வீர் சாவர்க்கர் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்