என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டெல்லியில் ''பாரத் டெக்ஸ்-2024'' கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- பாரத் டெக்ஸ் -2024 சர்வதேச ஜவுளி கண்காட்சி டெல்லியில் இன்று தொடங்கியது.
- பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:
பாரத் டெக்ஸ் -2024 சர்வதேச ஜவுளி கண்காட்சி தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் முன்னிலை வகித்தார்.
மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வர்த்தக மையத்தில், 'பாரத் டெக்ஸ் - 2024' இன்று தொடங்கி மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில், நாடு முழுவதுமுள்ள ஜவுளித்துறையினர் தங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர்.
பஞ்சு முதல் ஆடைகள் வரை அனைத்து உற்பத்தி நிலை நிறுவனங்களும், தங்கள் உற்பத்தி திறனை வெளிப்படுத்த இது வாய்ப்பாக அமைந்துள்ளது. ஜவுளித்துறை சார்ந்த இயந்திர உற்பத்தி நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
இதில் திருப்பூரைச் சேர்ந்த 50-க்கு மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi inaugurates Bharat Tex 2024, one of the largest-ever global textile events to be organised in the country, at Bharat Mandapam. pic.twitter.com/tBcy752LRi
— ANI (@ANI) February 26, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்