search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியது- பயணிகள் மீட்பு
    X

    பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியது- பயணிகள் மீட்பு

    • ஆழமற்ற நதியில் பயணித்த போது கப்பல் தரை தட்டி நின்றது.
    • கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி நதிவழி சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி தொடங்கி வைத்த அந்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியது.

    பீகாரின் சாப்ரா பகுதியில் ஆழமற்ற நதியில் பயணித்த போது கப்பல் தரை தட்டி நின்றது. கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிறிய படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் தொல்லியல் தளமான சிராந்த் சரண் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த சொகுசு கப்பல் வங்காளதேசம் வழியாக அசாமில் உள்ள திப்ருகரை சென்றடையும். அனைத்து ஆடம்பர வசதிகளுடன், 36 சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியுடன், 18 அறைகள் கப்பலில் உள்ளன. இது தவிர, 40 பணியாளர்கள் தங்கும் வசதியும் உள்ளது.

    Next Story
    ×