என் மலர்tooltip icon

    இந்தியா

    பரபரப்பான சூழ்நிலையில் நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்
    X

    பரபரப்பான சூழ்நிலையில் நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
    • இதில் பல முக்கிய மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்டு 21-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12 முதல் 18-ம் தேதி வரை பாராளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமான பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அதேபோல, எதிர்க்கட்சிகளும் பல முக்கிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளன. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமை கோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசின் பதில் கேட்டு போர்க்கொடி தூக்க முடிவு செய்துள்ளன.

    Next Story
    ×