search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வன்முறையின் தாக்கத்தை மூத்த தலைமுறையினர் அறிவார்கள்: மிசோரமில் ராகுல்
    X

    வன்முறையின் தாக்கத்தை மூத்த தலைமுறையினர் அறிவார்கள்: மிசோரமில் ராகுல்

    • எதிர்கட்சிகள் இந்தியா எனும் பெயரில் ஒரு கூட்டணையை உருவாக்கியுள்ளன
    • 1986ல் முதல்முதலாக மிசோரம் வந்தேன் என்றார் ராகுல்

    இந்தியாவில் அடுத்த வருடம் பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இவ்வருட இறுதிக்குள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்களும் நடைபெற உள்ளது.

    மத்தியில் உள்ள தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை அடுத்த வருட தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி பல மாநிலங்களின் முக்கிய 25க்கும் மேற்பட்ட கட்சிகள், இந்தியா கூட்டணி (I.N.D.I.A.) என கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன. இப்பின்னணியில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களை அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுவதால், கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மிசோரம் மாநிலத்தின் 40 இடங்களுக்கு வரும் நவம்பர் 7 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மிசோரம் தலைநகர் ஐசால் (Aizawl) வந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் (INC) மூத்த தலைவர் ராகுல் காந்தி, அங்கு 2 நாள் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மிசோரம் வந்த அவர் ஒரு பொது கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    மிசோரம் வருவது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. முதல்முதலாக 1986ல் நான் இங்கு வந்தேன். அப்போது மிசோரம் மெதுவாக வன்முறையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தது. நான் என் தந்தையுடன் வந்த போது மிசோ ஒப்பந்தம் கையெழுத்தானது. 1987ல் மாநில அந்தஸ்து கிடைத்தது. தற்போதுள்ள தலைமுறையினர் இங்கு வன்முறையை பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், வன்முறையினால் ஏற்படும் பாதிப்பு மூத்த தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

    அதிக மலைப்பிரதேசங்களை கொண்டதால் "மலை மாநிலம்" (mountain state) என்றும் அழைக்கப்படும் மிசோரம் மாநிலத்தில், 2008லிருந்து 2018 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×