பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்- புகார் அளிக்க உதவி எண் அறிவிப்பு

எச்.டி.ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு.புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என அறிவிப்பு.
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்- புகார் அளிக்க உதவி எண் அறிவிப்பு
Published on

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு அமைப்பு புகார் எண்ணை அறிவித்துள்ளது.

அதன்படி, ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க 6360938947 என்கிற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சிறப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபாச வீடியோ, ஆள் கடத்தல் விவகாரத்தில் கைதாகி உள்ள எச்.டி.ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வைக்கப்பட்டுள்ளது.

கோரமங்களா பகுதியில் உள்ள நீதிபதி வீட்டில், ரேவண்ணாவை ஆஜர்படுத்திய நிலையில், போலீஸ் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com