search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத்தலைவர் உத்தரவு
    X

    13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத்தலைவர் உத்தரவு

    • மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி மும்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    * மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்.

    * அருணாச்சலப் பிரதேசம் மாநில ஆளுநராக திரிவிக்ராம் பர்னாயக் நியமனம்.

    * சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யா நியமனம்.

    * இமாச்சலப்பிரதேச ஆளுநராக பிரதாப் சுக்லா நியமனம்.

    * அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா நியமனம்.

    * ஆந்திர மாநில ஆளுநராக அப்துல் நசீர் நியமனம்.

    * சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன் நியமனம்.

    * மணிப்பூர் மாநில ஆளுநராக அனுசுயா நியமனம்.

    * மேகாலயா மாநில ஆளுநராக பகு சவுகான் நியமனம்.

    * பீகார் மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் நியமனம்.

    * மகாராஷ்டிரா மாநில ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமனம்.

    * லடாக் மாநில ஆளுநராக மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×