என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவில் ஓட்டை- புவி காந்த புயல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை
- சூரியனில் ஒருவாரத்தில் தோன்றிய 2-வது துளை இது ஆகும்.
- கடந்த 23-ந்தேதி சூரியனின் தென்துருவ பகுதியில் ஒரு துளை கண்டறியப்பட்டது.
புதுடெல்லி:
சூரியனின் செயல்பாடு பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சூரியனின் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது 'கொரோனல் ஓட்டை' என்று விஞ்ஞானிகள் அழைக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போனது போன்று காட்சி அளிக்கிறது.
இந்த கொரோனல் ஓட்டையை சூரியனின் தென் துருவ பகுதி அருகே கடந்த 23-ந்தேதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது.
கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவி காந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான என்.ஓ.ஏ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏனெனில் கொரோனல் ஓட்டையில் இருந்து புறப்படக்கூடிய மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும், அது வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் பூமியின் காந்த புலம், செயற்கைகோள்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பார்க்க விஞ்ஞானிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
சூரியனில் ஒருவாரத்தில் தோன்றிய 2-வது துளை இது ஆகும். சூரியனை ஆய்வு செய்யும் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகத்தால் 2 துளைகளும் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 23-ந்தேதி சூரியனின் தென்துருவ பகுதியில் ஒரு துளை கண்டறியப்பட்டது.
இதுகுறித்து நாசா அதிகாரிகள் கூறுகையில், கொரோனல் துளைகள் என்பது அதிவேக சூரிய காற்றின் ஒரு ஆதாரமான காந்த பகுதிகளாகும். தீவிர புறஊதா ஒளியின் பல அலை நீளங்களில் பார்க்கும்போது அவை இருட்டாக தெரியும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்