என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
முழு சொத்தும் மகள்களுக்கு கிடைக்க மறுமணம் செய்த முஸ்லீம் தம்பதிக்கு சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல்- வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
- செல்போன் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இத்தம்பதிக்கு மிரட்டல்கள் வந்தன.
- வீடு முன்பு 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த காஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சுக்கூர். வக்கீல்.
இவரது மனைவி ஷீனா. முஸ்லிம் தம்பதியான இவர்கள் ஷரியத் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இச்சட்டப்படி பெற்றோரின் முழு சொத்தும் அவர்களின் மகள்களுக்கு கிடைக்காது.
சுக்கூர்-ஷீனா தம்பதிக்கு 3 மகள்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அவர்கள் தங்களின் சொத்துக்கள் அனைத்தும் மகள்களுக்கே கிடைக்க வேண்டும் என்று விரும்பினர்.
இதற்காக கடந்த 8-ந் தேதி மகளிர் தினத்தன்று சிறப்பு திருமண சட்டப்படி மறுமணம் செய்ய முடிவு செய்தனர். சுக்கூர்-ஷீனா தம்பதியின் மறுமணம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுதியது.
பல்வேறு அமைப்பினர் இதற்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் சிலர் சுக்கூர்-ஷீனா தம்பதிக்கு மிரட்டல் விடுக்கவும் செய்தனர்.
செல்போன் மூலமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இத்தம்பதிக்கு மிரட்டல்கள் வந்தன. இது பற்றி தகவல் அறிந்ததும் காஞ்சாங்காடு போலீசார் சுக்கூர்-ஷீனா தம்பதியின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.
மேலும் அவர்களின் வீடு முன்பு 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருப்பது சங்கடமாக இருப்பதாக சுக்கூர்-ஷீனா தம்பதியினர் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்