உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் எதிரொலி: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் கடும் சரிவு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு சென்செக்ஸ் புள்ளிகள் 2000 வரை குறைந்து வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை
Published on

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,232.06 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் குறியீட்டு சென்செக்ஸ் 1813 புள்ளிகள் குறைந்து வர்த்தகமானது.

அதன்பின் பெரிய அளவில் உயரவில்லை. சிறிது நேரத்தில் 55,147.73 புள்ளிகளுக்கு குறிந்தது. தற்போது 10 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் குறையீடு சென்செக்ஸ் 55,249.89 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

காலையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் தற்போது 1,982.17 புள்ளிகள் குறைந்து வர்த்தகமாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com