search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லாலுவுக்கு எதிராக கைது உத்தரவு- மத்திய பிரதேசம் கோர்ட் அதிரடி
    X

    லாலுவுக்கு எதிராக கைது உத்தரவு- மத்திய பிரதேசம் கோர்ட் அதிரடி

    • பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணைக்கு லாலு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

    குவாலியர்:

    கடந்த 1995 முதல் 1997-ம் ஆண்டு வரையிலான காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வாங்கியது தொடர்பாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு குவாலியர் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு லாலு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக நிரந்தர கைது உத்தரவை கோர்ட்டு பிறப்பித்தது.

    ஒருவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டால் அவரை கைது செய்யும் போது கோர்ட்டில் கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பு சிறப்பு வக்கீல் அபிஷேக் தெரிவித்தார்.

    Next Story
    ×