மகாராஷ்டிரா: அனுமன் கோவில் மண்டபம் இடிந்து விழுந்து 6 பக்தர்கள் பலி - 40 பேர் படுகாயம்

வார இறுதி நாள் என்பதால் இதில் பங்கேற்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
மகாராஷ்டிரா: அனுமன்  கோவில் மண்டபம் இடிந்து விழுந்து 6 பக்தர்கள் பலி  - 40 பேர் படுகாயம்
Published on

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் யஷ்வாடி மாருதி என்ற புகழ்பெற்ற அனுமன் கோவில் அமைந்துள்ளது.

பஜனை

இன்று மாலை சுமார் 3:30 மணியளவில் பஜனை நடந்துகொண்டிருந்தது. வார இறுதி நாள் என்பதால் இதில் பங்கேற்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது கான்கிரீட் ஸ்லாப்களை கொண்டு புதிதாக கட்டப்பட்டு வந்த சபா மண்டபத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து பக்தர்கள் மீது விழுந்தது.

உயிரிழப்பு

இதில் 6 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இரங்கல்

பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர மாநில அரசு சார்பாக தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுமானப் பணியில் தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டதே இந்த விபத்திற்குக் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com