என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சத்ரபதி சிவாஜியின் 394-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- சத்ரபதி சிவாஜி மகாராஜின் 394-வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- சிவாஜி சிலைக்கு இன்று காலையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மகாராஷ்டிரா மாநில புகழ்பெற்ற போர் வீரரும் மாமன்னருமான சத்ரபதி சிவாஜி மகாராஜ் 1630-ம் ஆண்டு புனே மாவட்டம் ஜுன்னார் தாலுகாவில் உள்ள சிவனேரியில் பிறந்தார்.
மறைந்த சத்ரபதி சிவாஜி மகாராஜின் 394-வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செம்பூரில் உள்ள சிவாஜி சிலைக்கு இன்று காலையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து சிவனேரி கோட்டைக்கு சென்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அஞ்சலி செலுத்தினார். அங்கு நடந்த தொட்டில் விழாவில் துணை முதல்வர்கள் அஜித் பவார், பட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சிவாஜிக்கு மரியாதை செலுத்தினார்கள்.
சிவாஜி மகாராஜின் பிறந்தநாளையொட்டி துணை முதல்வர் பட்னாவிஸ் 'எக்ஸ்' இணைய தளத்தில் "வெற்றிகரமான, புகழ்பெற்ற, சக்திவாய்ந்த, திறமையான, நல்லொழுக்கமுள்ள, அறிவுள்ள அரசன் வீர சிவாஜி. அவருக்கு இன்று புகழ் அஞ்சலி, மரியாதை செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்