

கேரள சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன், வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சிபிஎம் அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, திங்கள்கிழமை இரவு திருவனந்தபுரம் திரும்பிய பினராயி விஜயன், அங்குள்ள பேக்கரி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு இரண்டு அடுக்கு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, கேரள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான Cliff House வளாகத்திலிருந்து அவர் வெளியேறினார்.
கட்சி அவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பை வழங்க முன்வந்தபோதிலும், அவர் தனது குடும்பத்துடன் இந்த வாடகை வீட்டிலேயே தங்க முடிவு செய்துள்ளார்.
தர்மடம் தொகுதியில் வெற்றி பெற்ற பினராயி கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்கு அந்தப் பதவிக்கான அதிகாரப்பூர்வ இல்லமான Cantonment House ஒதுக்கப்படும்.
இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை சிபிஎம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்னணி, இந்தத் தேர்தலில் 140 இடங்களில் வெறும் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
102 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரசின் யுடிஎப் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.