கான்பூர் பூங்காவுக்கு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் பெயர் சூட்ட முடிவு

இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். மனைவி அஷான்யாவின் கண் முன்னே கொல்லப்பட்டார்.
கான்பூர் பூங்காவுக்கு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் பெயர் சூட்ட முடிவு
Published on

ராஜஸ்தான் மாநிலம் கான்பூரில் ஷ்யாம் நகரில் உள்ள ஒரு பூங்கா மற்றும் சதுக்கத்திற்கு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் பெயர் சூட்டப்படும் என்று நகர மேயர் பிரமிளா பாண்டே இன்று அறிவித்தார்.

ராஜஸ்தானை சேர்ந்த 31 வயதான சுபம் திவேதி, இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அவரது மனைவி அஷான்யாவின் கண் முன்னே கொல்லப்பட்டார்.

மேலும் அஷான்யா விரும்பினால் கான்பூர் நகராட்சியில் அவுட்சோர்சிங் வேலை வழங்குவோம் என்றும் மேயர் பிரமிளா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக நேற்று அவருக்கு அந்நகரில் மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வு நடத்தபட்டது. பஹல்காம் பயங்ரவாத தாக்குதலில் சுபம் திவேதி உட்பட 26 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com