சிபிஐ விசாரணைக்கு 'நோ' சொன்ன நீதிபதி.. முடா விவகாரத்தில் சித்தராமையாவுக்கு ஹேப்பி நியூஸ்

வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது
சிபிஐ விசாரணைக்கு 'நோ' சொன்ன நீதிபதி.. முடா விவகாரத்தில் சித்தராமையாவுக்கு ஹேப்பி நியூஸ்
Published on

கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் இருந்த ரூ.300 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை சமீபத்தில் அமலாக்கத்துறை முடக்கியது.

இதற்கிடையே தகவல் அறியும் உரிமை சட்ட(RTI) ஆர்வலர் சினேகமாயி கிருஷ்ணா என்பவர் முடா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்

இந்த வழக்கை நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜனவரி 27ஆம் தேதி வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதி எம். நாகபிரசன்னா தீர்ப்பு வழங்கியுள்ளார்." லோக் ஆயுக்தா விசாரணை சுதந்திரமாக நடந்து வருகிறது. வழக்கின் விசாரணை ஆவணங்களை பார்க்கும்போது, அது தவறான பாதையில் செல்வதாகவோ, அல்லது பெயரளவில் நடத்தப்பட்ட வலுவில்லாத விசாரணையாகவோ தெரியவில்லை. எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை" என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com