

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
படையினருக்குக் கிடைத்த உளவுத் தகவலின் படி ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். முன்னதாக தேடுதல் வேட்டையில் இறங்கி, அப்பகுதியை முழுவத்துவமாக சுற்றி வளைத்தனர்.
அப்பகுதியில் தடிமனான இலைகள் மற்றும் அடர்ந்த மரங்கள் நிறைந்துள்ளதால் , பயங்கரவாதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க ராணுவத்தின் சிறப்புப் பிரிவான விக்டர் போர்ஸ் கூடுதலாக வரவழைக்கப்பட்டன.
அப்போது சுமார் 7.45 மணியளவில் இருதரப்பினருக்கும் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த சம்பாவத்தில் இரண்டு பயன்கிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இவ்விருவர்களும் லஷ்கர்-இ-தைபா அமைப்பின் சந்தேகத்திற்குரிய செயல்பாட்டாளரான ஜாகிர் அகமது கனி மற்றும் அவனது கூட்டாளி லத்தீஃப் பட் என தகவல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மேலும் சில பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிகாப்பு படையினருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளில் கொல்லப்பட்ட காணியுடன் மற்றும் ஒருவர் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் மேலும் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு அமைப்புகளின் தகவலின்படி, அங்கு சிக்கிய இரு பயங்கரவாதிகளும் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு முதல் லஷ்கர் அமைப்பில் சேர்ந்த ஜாகீர் அகமது கானி, பயங்கரவாதத்தில் செயல்பட்டு வந்தார். இவர் குல்காமில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் பல்வேறு பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கானிக்கு தொடர்பு இருப்பதாகப் பாதுகாப்பு அமைப்புகள் கூறியுள்ளது.