என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நாட்டிலேயே முதல்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
- ஹூக்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் தூரத்துக்கு இந்த வழித்தட பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது
- ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடிஅடிக்கல் நாட்டினார்
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் மெட்ரோ கிழக்கு -மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியானஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை பயணிகள் போக்குவரத்துக்கு தயாராகி உள்ளது.
இந்த மெட்ரோ ரெயில் வழித்தட பாதை ஹூக்ளி ஆற்றின் அடியில் ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ வழித்தடம் 4.8 கி.மீ. நீளத்தில் ரூ.4,965 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் தூரத்துக்கு இந்த வழித்தட பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
45 வினாடிகளில் இந்த பாதையை மெட்ரோ ரெயில் கடந்து செல்லும். இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அப்போது மெட்ரோ ரெயிலில் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மேலும் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்