

இந்தியா மற்றும் தென்கொரியா இடையே ஏப்ரல் 2026-ல் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்புகளைத் தொடர்ந்து, பசுமை எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் கூட்டுறவை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இரு நாடுகளும் எலக்ட்ரிக் மொபிலிட்டி (மின்சார வாகனங்கள்), பசுமை எரிசக்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் 16 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், உள்கட்டமைப்பு அமைத்தல் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் கொள்கைகளை உருவாக்குவதில் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது ஆசியா மற்றும் அதற்கப்பால் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கும், நிலையான நிதி வாய்ப்புகளைத் திறப்பதற்கும் ஒரு புது உந்துதலைக் குறிக்கிறது.
இந்த செயல்திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், GGGI-யின் துணை நிர்வாக இயக்குநர் டாக்டர் மல்லே ஃபோஃபானா, புது தில்லியில் ISA-யின் தலைமை இயக்குநர் ஆஷிஷ் கன்னா மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து, இரு அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தார்.
GGGI தொடங்கப்பட்டதிலிருந்து, 18 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பசுமை முதலீட்டு உறுதிமொழிகளைத் திரட்டியுள்ளது; 8.3 மில்லியன் மக்களுக்குத் தூய்மையான எரிசக்தியைப் பெற உதவியுள்ளது.
GGGI உடனான தனது ஒத்துழைப்பை ஆழப்படுத்த ISA ஆவலுடன் உள்ளது என்று சர்வதேசக் கூட்டமைப்பின் தலைமை இயக்குநர் ஆஷிஷ் கன்னா குறிப்பிட்டார்.
மேலும் இந்தக் கூட்டணி, இந்தியாவின் 'வளர்ந்த இந்தியா 2047' தொலைநோக்குப் பார்வைக்கு கொரியாவின் தொழில்நுட்ப வல்லமையை இணைத்து, நிலையான மற்றும் தூய்மையான எரிசக்தி எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.