என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நான் மோடி அல்ல... வாக்குறுதியை நிறைவேற்றுவேன்: ராகுல் காந்தி
- அதானியின் வங்கிக்கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளன.
- சந்திரசேகரராவிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களுடைய கனவு.
திருப்பதி:
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று தெலுங்கானா மாநிலத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
நான் நரேந்திர மோடி அல்ல. நான் ஒரு வாக்குறுதியை அளிக்கும்போது அதை நிறைவேற்ற முயற்சி செய்வேன்.
பொதுமக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் வெளிநாட்டில் மீட்கப்பட்ட கருப்பு பணத்தில் இருந்து டெபாசிட் செய்வதாக மோடி உறுதி அளித்தார்.
ஆனால் இதுவரை உங்கள் கணக்குகளுக்கு ஒரு பைசா கூட மாற்றப்படவில்லை.
ஆனால் அதானியின் வங்கிக் கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளன. மோடி போல் இல்லாமல் நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
தெலுங்கானா மக்கள் உடனான உறவு எனக்கு மட்டுமல்ல எனது தாத்தா நேரு, பாட்டி இந்திரா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் உள்ளது.
நாங்கள் இங்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி கொண்டு உள்ளோம்.
சந்திரசேகரராவ் கொள்ளை அடித்த பணம் பொதுமக்கள் வங்கி கணக்கில் மீண்டும் போடப்படும். சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் தெலுங்கானாவை தங்களின் திருட்டு தளமாக கருதுகின்றனர்.
சந்திரசேகரராவிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களுடைய கனவு. தெலுங்கானா மாநிலத்தை ஒரு மன்னனும் அவனது குடும்பமும் தங்களின் ராஜ்ஜியம் போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி மக்களுடைய அனைத்து கொள்கைகளையும் வேண்டிய வசதிகளையும் நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்