search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரிலேயே இல்லையாம்.. ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள்
    X

    காஷ்மீரிலேயே இல்லையாம்.. ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள்

    • விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளையும் மோசமாக பாதிப்பு.
    • பனிப்பொழிவு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

    குளு குளு பனி பொழிவுக்கு பெயர்போன காஷ்மீரில், இந்த குளிர்காலத்தில் பள்ளத்தாக்கு உள்பட எங்கும் பனிப்பொழிவு இல்லாதது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்தது. இதனால், பயணிகள் சோகத்துடன் வீடு திரும்பினர்.

    சுற்றுலா மட்டுமல்லாமல், பனி சார்ந்த செயல்பாடுகளும் குறிப்பாக, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளையும் மோசமாக பாதித்துள்ளது.

    புத்தாண்டு தினத்தன்று குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கு மற்றும் பிற பனி தொடர்பான செயல்பாடுகளை அனுபவிக்கும் நம்பிக்கையில் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். ஆனால், பனிப்பொழிவு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

    இதுகுறித்து டெல்லியை சேர்ந்த பங்கஜ் சிங் என்பவர் கூறுகையில்"குல்மார்க்கில் பனியை ரசிப்பதற்காக ஜனவரி 3 முதல் ஜனவரி 9 வரை ஏழு நாள் பேக்கேஜை முன்பதிவு செய்து வந்தோம். ஆனால் இங்கு பனி இல்லை. பெரும்பாலான இடங்களில் வெள்ளை நிலப்பரப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது வடக்கின் மற்ற பகுதிகளைப் போல பழுப்பு நிறத்தில் இருந்தது. " என்று ஏமாற்றத்துடன் கூறினார்.

    Next Story
    ×