குஜராத் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்

இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வாக்கு சாவடிக்கு வந்தார்.பிரதமரின் தாயார் வாக்களிக்க குடும்ப உறுப்பினர்கள் உதவி செய்தனர்.
ஹீராபென் மோடி
ஹீராபென் மோடி
Published on

அகமதாபாத்:

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் காந்திநகர் அருகே ரேசன் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு, பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வருகை தந்தார். பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் தமது வாக்கை அவர் பதிவு செய்தார்.

முன்னதாக அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். நேற்று பிரதமர், தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com