பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதல் காலமானார்

அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதல் உயிரிழந்தார். இவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தார்.
பிரகாஷ் சிங் பாதல்
பிரகாஷ் சிங் பாதல்
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95), மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com