என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சென்னைக்குப் பிறகு ஆந்திராவில் மிச்சாங் புயல் கோரத்தாண்டவம்: 8 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு
- சென்னையில் இருந்து விலகிச் சென்ற மிச்சாங் புயல் ஆந்திராவில் கரையை கடக்க இருக்கிறது.
- திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிச்சாங் புயல் ஆந்திர மாநிலம் சீராலா- பாபட்லா இடையே கரையை கடக்க இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கோண சீமா, உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று காலை முதலே 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.
புயல் காற்றுடன் கனமழை பெய்ததால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.
வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காக 10-க்கும் மேற்பட்ட மத்திய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 300 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கிருஷ்ணா மாவட்டத்தில் காற்று வீசியதால் கடலில் 10 அடி உயரத்திற்கு மேல் அலை எழும்பி கடலோரங்களில் இருந்த மீனவர்களின் வீடுகளில் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்தது.
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 63 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்த 11 ஆயிரத்து 876 மீனவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 110 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதம் அடைந்தன.
பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது.
நெல்லூர், விஜயவாடா நகராட்சி பகுதிகளிலும் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வீட்டில் உள்ள குழந்தைகள் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#WATCH | Andhra Pradesh: NDRF team present at Bapatla beach as #CycloneMichaung is likely to make landfall today on the southern coast of the state between Nellore and Machilipatnam pic.twitter.com/YwQv0tOsG9
— ANI (@ANI) December 5, 2023
#WATCH | Tirupati, Andhra Pradesh: TTD Chairman, Tirupati MLA Bhumana Karunakara Reddy and City Commissioner Haritha take stock of Pulavani Gunta and Gollavani Gunta areas which are inundated following rainfall#CycloneMichuang pic.twitter.com/t9lF9LGzIC
— ANI (@ANI) December 5, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்