மகளின் கண்முன்னே மனைவியை 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்

ரேகா (32) என்ற பெண் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார்.அவரது கணவரும் அதே கால் சென்டரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
மகளின் கண்முன்னே மனைவியை 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்
Published on

கர்நாடகாவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேகா (32) என்ற பெண் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். ரேகாவின் பரிந்துரையால் அவரது கணவர் லோஹிதாஷ்வாவும் அதே கால் சென்டரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ரேகா மற்றும் அவரது கணவருக்கும் இது 2 அவனது திருமணமாகும். ரேகாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சுங்கடகட்டே பேருந்து நிலையம் அருகே ரேகாவும் அவரது மூத்த மகளும் சாலையை கடப்பதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த லோஹிதாஷ்வாவுக்கும் ரேகாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த லோஹிதாஷ்வா தான் மறைந்திருந்த கத்தியை எடுத்து ரேகாவை 11 முறை கொடூரமாக குத்தி கொன்றார். இதனை நேரில் பார்த்த மூத்த மகள் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் லோஹிதாஷ்வா அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com