

பீகார் மாநிலத்தில் பார் ரயில் நிலைய தண்டவாளத்தில் பான் மசாலாவை துப்பிய நபர் வந்தே பாரத் ரெயில் மோதி உயிரிழந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார் ரயில் நிலையத்தில் பாட்னா ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது ரெயில்வே பாதுகாப்புப் படையினரும் அரசு ரெயில்வே காவல்துறையினரும் உடனடியாக காயமடைந்த நபரை பார் சதர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகி, ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.