சத்தீஸ்கரில் 22 நக்சலைட்கள் சுட்டுக்கொலை: உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு

பீஜப்பூரில் நடந்த என்கவுண்டரில் 18 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சத்தீஸ்கரில் 22 நக்சலைட்கள் சுட்டுக்கொலை: உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு
Published on

புதுடெல்லி:

சத்தீஸ்கர் மாவட்டத்தின் பீஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு காட்டில் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், கான்கர் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டரில் 4 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று நமது வீரர்கள் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். சத்தீஸ்கரின் பீஜப்பூர் மற்றும் கான்கரில் நமது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மோடி அரசாங்கம் நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. மேலும் சரணடையாத நக்சலைட்டுகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாடு நக்சலைட்டுகளிலிருந்து விடுபடும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com