சத்தீஸ்கரில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்து விழுந்தது- 7 பேர் உயிரிழப்பு

2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.சுரங்க இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கிறார்கள்
சத்தீஸ்கரில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்து  விழுந்தது- 7 பேர் உயிரிழப்பு
Published on

சத்தீஸ்கர் மாநிலம் மால்கான் என்ற கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் மேற்பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com