பீகாரில் புனித நீராடும் பண்டிகையில் நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழப்பு

'ஜிவித்புத்ரிகா' என்பது பீகாரில் உள்ள மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் அனுசரித்து நதி அல்லது குளத்தில் புனித நீராடுவார்கள்.
43 people lost their lives during the holy bathing festival in Bihar
Published on

பீகாரில் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் பண்டிகையில் 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தின் 15 மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் பக்தர்கள் புனித நீராடும் போது இந்த துயர சம்பவம் நடந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

'ஜிவித்புத்ரிகா' என்பது பீகாரில் உள்ள மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். இதில் பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் அனுசரித்து தங்கள் குழந்தைகளுடன் நதி அல்லது குளத்தில் புனித நீராடுவார்கள்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com