3 மசோதாக்கள் மீது 12 மணிநேரம் விவாதம் நடைபெறும்- சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

3 மசோதாக்கள் மீது நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்.
3 மசோதாக்கள் மீது 12 மணிநேரம் விவாதம் நடைபெறும்- சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
Published on

தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீது 12 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

திருத்தச் சட்டம் தவிர மற்ற 2 மசோதாக்களை ஒன்றாக விவாதிக்க அனுமதிக்கப்படுகிறது.

எந்த விதிமீறலும் இல்லாமல் எம்பிக்கள் தங்கள் கருத்துகளை கூற வேண்டும், மசோதா தவிர வேறு எதைப்பற்றியும் பேசக்கூடாது.

ஒவ்வொரு கட்சி எம்பிக்களுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கப்படுகிறதோ அவ்வளவு நேரத்திற்குட்பட்டு தான் பேச வேண்டும்.

தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீது நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்.

இவு்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com